தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

லடாக்கில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழா

லடாக்கில் 74ஆவது இந்திய சுதந்திர தின விழா இந்திய - திபெத் எல்லை காவல்படையினரால் கொண்டாடப்பட்டது.

News image

லடாக்கில் தேசிய கொடியை ஏந்தி அணிவகுத்த வீரர்கள்

Updated On :15 ஆகஸ்ட் 2020, 7:25 am

DIN

லடாக்கில் 74ஆவது இந்திய சுதந்திர தின விழா இந்திய திபெத் எல்லை காவல்படையினரால் கொண்டாடப்பட்டது.

நாடு முழுவதும் இந்தியாவின் 74ஆவது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாநில அரசுகள், பொதுமக்கள், காவல்துறையினர், ராணுவத்தினர் என பல தரப்பினரும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இந்திய திபெத் எல்லைப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள லடாக் பகுதியில் எல்லைக் காவல் படையினரால் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. எல்லைக் காவல்படை வீரர்கள் மூவர்ணக் கொடியை ஏந்தி அணிவகுப்பு மேற்கொண்டனர். 

முன்னதாக கடல்மட்டத்திலிருந்து 14 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள எல்லைக் காவல் முகாமில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.