தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நாட்டிலேயே அதிக புற்றுநோயாளிகளைக் கொண்டிருக்கும் ஆயிஸோல் மாவட்டம்

தேசிய புற்றுநோய் பதிவுத் திட்டத்தின் அறிக்கையில், இந்த ஆண்டு இறுதியில் நாட்டில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 13.9 லட்சமாக உயரும் என்றும், 2025-ஆம் ஆண்டு வாக்கில் இது 15.7 லட்சமாக உயரும் அபாயம் இருப்பதா

News image
நாட்டில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 2025-ம் ஆண்டில் 15.7 லட்சமாக உயரும்
Updated On :19 ஆகஸ்ட் 2020, 7:54 am

DIN

புது தில்லி: நாட்டிலேயே அதிக புற்றுநோயாளிகளைக் கொண்டிருக்கும் மாவட்டமாக மிசோரம் மாநிலத்தின் தலைநகர் ஆயிஸோல் மாவட்டம் விளங்குகிறது.

இங்கு ஆண்களில் ஒரு லட்சம் பேரில் 296.4 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளது. அடுத்து உஸ்மானாபாத் மற்றும் பீட் மாவட்டங்களில் இது 39.5 விகிதமாக உள்ளது. பெண்களில் அதிக புற்றுநோய் பாதிப்பைக் கொண்டிருக்கும் மாவட்டமாக அருணாசலத்தின் பாபும் பாரே உள்ளது. இங்கு ஒரு லட்சம் பெண்களில் 219.8 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளது. அடுத்ததாக உஸ்மானாபாத் மற்றும் பீட் மாவட்டங்களில் புற்றுநோய் பாதித்த பெண்களின் விகிதம் 49.4 ஆக உள்ளது. 

தேசிய புற்றுநோய் பதிவுத் திட்டத்தின் அறிக்கையில், இந்த ஆண்டு இறுதியில் நாட்டில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 13.9 லட்சமாக உயரும் என்றும், 2025-ஆம் ஆண்டு வாக்கில் இது 15.7 லட்சமாக உயரும் அபாயம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை உயரும் என்று கணித்திருந்ததை விட உயர்ந்து தற்போது 12% உயரும் அபாயம் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தேசிய நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சி மையத்தால் நடத்தப்பட்ட தேசிய புற்றுநோய் பதிவுத் திட்டத்துக்குக் கிடைத்த அடிப்படைத் தகவல்களைக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

2020-ஆம் ஆண்டில் புகையிலை பழக்கம் கொண்ட புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 3.7 லட்சமாக (27.1%) ஆக உள்ளது. பெண்கள் மற்றும் மார்பக புற்றுநோயாளிகளின எண்ணிக்கை 2.0 லட்சமாக (14.8%) ஆகவும், குடல் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 2.7 லட்சமாக (19.7%) ஆகவும் உள்ளது.

நாட்டில் புகையிலைப் பொருள்களை பயன்படுத்தும் பழக்கம் வட இந்திய மாநிலங்களில் அதிகம் இருப்பதும், குறிப்பாக ஆண்களுக்கு இந்த பழக்கம் இருப்பதால் புற்றுநோய் பாதிப்பும் அதிகமாக உள்ளது. இந்தப் பழக்கம் இருக்கும் ஆண்களுக்கு நுரையீரல், வாய், வயிறு, குடல் புற்றுநோய் ஏற்படுவது வழக்கமானதாக உள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.