2020-ஆம் ஆண்டில் புகையிலை பழக்கம் கொண்ட புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 3.7 லட்சமாக (27.1%) ஆக உள்ளது. பெண்கள் மற்றும் மார்பக புற்றுநோயாளிகளின எண்ணிக்கை 2.0 லட்சமாக (14.8%) ஆகவும், குடல் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 2.7 லட்சமாக (19.7%) ஆகவும் உள்ளது.
நாட்டில் புகையிலைப் பொருள்களை பயன்படுத்தும் பழக்கம் வட இந்திய மாநிலங்களில் அதிகம் இருப்பதும், குறிப்பாக ஆண்களுக்கு இந்த பழக்கம் இருப்பதால் புற்றுநோய் பாதிப்பும் அதிகமாக உள்ளது. இந்தப் பழக்கம் இருக்கும் ஆண்களுக்கு நுரையீரல், வாய், வயிறு, குடல் புற்றுநோய் ஏற்படுவது வழக்கமானதாக உள்ளது.