ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

தேர்தல்கள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

கரோனா பேரிடர் காலத்தில் நடைபெறும் தேர்தல்கள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

News image
தேர்தல் ஆணையம்
Updated On :21 ஆகஸ்ட் 2020, 11:31 am

DIN

கரோனா பேரிடர் காலத்தில் பொதுத்தேர்தல், இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபடும் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். வாக்குப்பதிவு மையத்துக்குள் கட்டாயமாக சானிடைசர், சோப்பு ஆகிய கைகளை சுத்தப்படுத்தும் பொருள்களை வைத்திருக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். 

தேர்தல் பணிகள் நடைபெறும் இடங்களில் வெப்ப பரிசோதனை கருவிகள் வைத்திருக்க வேண்டும்

கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க மாநில, மாவட்ட மற்றும் தொகுதி வாரியாக சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார். 

வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும்போது அலுவலர்கள் கையுறைகளை அணிந்திருக்க வேண்டும். வாக்குப்பதிவின்போது தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுத்தம் செய்யப்பட வேண்டும்.

தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடைபெறும். மேலும், தேர்தல் பணியாளர்களுக்கான அனைத்து வழிமுறைகளும் ஆன்லைன் அல்லது மொபைல் ஆப் மூலமாக வழங்கப்படும். 

தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பம், பாதுகாப்பு வைப்புத் தொகை செலுத்துதல் ஆகியவற்றை ஆன்லைனில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வேட்புமனுத் தாக்கலின்போது இருவர் மட்டுமே வரவேண்டும். அதிகபட்சமாக இரு வாகனங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். 

பரப்புரைகளின்போது தனிநபர் இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.