தெலங்கானா ஸ்ரீசைலம் அணை நீர்மின் நிலையத்தில் தீ விபத்து; 9 பேர் சிக்கினர்
ஸ்ரீசைலம் அணையின் நீர்மின் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நீர்மின் நிலையத்தின் 4 வது அலகு முனையத்தில் விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையின் நீர்மின் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 10.30 மணியளவில் நீர்மின் நிலையத்தின் 4 வது அலகு முனையத்தில் விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்து நடந்த சமயத்தில் அவ்விடத்தில் சுமார் 30 பணியாளர்கள் இருந்துள்ளது. 10க்கும் மேற்பட்டோர் உடனடியாக வெளியேறினர். தற்போது சம்பவ இடத்தில் தீயணைப்புத் துறையினர் தீவிர மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக 8 ஊழியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், சிக்கியுள்ள 9 பேரை மீட்கும்பணி நடைபெற்று வருகிறது.
தெலங்கானா மாநில மின்துறை அமைச்சர் ஜெகதீஸ்வர் ரெட்டி சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார். விபத்து நடந்த இடத்தில் கடும் புகை ஏற்பட்டுள்ளதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...