மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஒடிசாவில் குடியிருப்புப் பகுதியில் புகுந்து கரடி தாக்கியதில் ஒருவர் காயம்

ஒடிசாவில் குடியிருப்புப் பகுதியில் புகுந்து கரடி தாக்கியதில் ஒருவர் காயமடைந்தார். 

News image
Updated On :21 ஆகஸ்ட் 2020, 1:16 pm

ஒடிசாவில் குடியிருப்புப் பகுதியில் புகுந்து கரடி தாக்கியதில் ஒருவர் காயமடைந்தார். 

ஒடிசா மாநிலம், கலஹந்தி மாவட்டத்தில் உள்ள பவானிபட்னாவின் குடியிருப்புப் பகுதியில் இன்று கரடி ஒன்று நுழைந்தது. இதனால் அச்சமடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். அப்போது அந்த வழியாக வந்த நபரை கரடி திடீரென தாக்கியது. 

இதில் அந்த நபர் கீழே விழுந்தார். உடனே அங்கிருந்தவர்களில் இருவர் தடியைக் கொண்டு கரடியை சரமாரியாக தாக்கி அந்த நபரை மீட்டனர். இந்த சம்பவத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அப்பகுதியினர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். 

தகவல் அறிந்து அங்கு விரைந்த வனத்துறையினர் கரடியை பிடிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக இதேபோன்று ஒரு சம்பவம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் இங்கு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.