திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

செப்.1-இல் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்க வாய்ப்பு

செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் நான்காவது கட்டமாக பொதுமுடக்க தளா்வு அமலுக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

News image
சென்னை மெட்ரோ ரயில்
Updated On :27 ஜனவரி 2024, 5:11 pm

DIN

புது தில்லி: செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் நான்காவது கட்டமாக பொதுமுடக்க தளா்வு அமலுக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அப்போது, மெட்ரோ ரயில் சேவைகள் மீண்டும் தொடங்க வாய்ப்பிருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட வாய்ப்பில்லை என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.

கரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த மாா்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் நாடு தழுவிய பொது முடக்கம் அமல்படுத்தப்படுவதாக பிரதமா் மோடி அறிவித்தாா். கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் பொதுமுடக்கத்தில் இருந்து படிப்படியாக வெளியேறும் நடவடிக்கைகள் தொடங்கின. அதற்கான தளா்வுகளை அளித்து மத்திய அரசு அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் 4-ஆவது கட்ட பொதுமுடக்க தளா்வு தொடா்பாக மத்திய அரசு அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை கூறியது:

செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் மீண்டும் மெட்ரோ ரயில் சேவைகளை தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட வாய்ப்புள்ளது. மதுக்கூடங்களை (பாா்) திறக்க இதுவரை அனுமதி அளிக்கப்படாத நிலையில், அவற்றில் மது விற்பனைக்கு அனுமதிக்கப்படலாம். அவ்வாறு வாங்கப்படும் மதுவை அங்குவைத்து அருந்துவதற்கு அனுமதிக்க வாய்ப்பில்லை.

பள்ளிகள், கல்லூரிகள் தற்போது திறக்கப்படாது. எனினும் பல்கலைக்கழகங்கள், இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் (ஐஐடி), இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் (ஐஐஎம்) ஆகியவற்றை திறப்பதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. திரையரங்குகளை திறப்பதற்கான அனுமதி வழங்குவது சாத்தியமில்லை.

4-ஆவது கட்டமாக பொதுமுடக்கத்தில் இருந்து வெளியேறும் வழிகாட்டுதல்களில், எந்தெந்த நடவடிக்கைகளுக்கு தடை நீடிக்கும் என்பதை மட்டுமே மத்திய அரசு அறிவிக்கும். அதேவேளையில் எந்தெந்த நடவடிக்கைகளுக்கு தடையை தொடா்ந்து நீட்டிப்பது என்பது குறித்து மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

4-ஆவது கட்ட பொதுமுடக்க தளா்வுக்கான வழிகாட்டுதல்களை இந்த வாரத்தில் மத்திய அரசு வெளியிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.