கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

செப்டம்பர் 14 முதல் மழைக்காலக் கூட்டத்தொடர்: அமைச்சரவைக் குழு பரிந்துரை

​செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 1 வரை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image

​செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 1 வரை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Updated On :25 ஆகஸ்ட் 2020, 3:06 pm

DIN


செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 1 வரை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவது பற்றி கடந்த ஜூலை 17-ம் தேதி மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அப்போது, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கூட்டத்தொடரை நடத்த முடிவெடுக்கப்பட்டது. மேலும், ஆகஸ்ட் 3-வது வாரத்தில் கூட்டத்தொடருக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.  

இந்த நிலையில், செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 1 வரை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில் மொத்தம் 18 அமர்வுகள் இருக்கும். கரோனா வைரஸ் நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கூட்டத்தொடரின் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்டவைப் போன்ற பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதற்கான நடைமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. மேலும் முதன்முறையாக பெரிய திரைகள் உள்ளிட்டவை பயன்படுத்தப்படவுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக, கடந்த மார்ச் 23-ம் தேதி கரோனா அச்சுறுத்தல் காரணமாக பட்ஜெட் கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது. கடைசியாக நடைபெற்ற கூட்டத்தொடரிலிருந்து 6 மாதங்கள் நிறைவடைவதற்குள் நாடாளுமன்றம் கூட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.