மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜேஇஇ, நீட் தேர்வுகளை ஒத்திவைக்க ஒடிசா மாநில முதல்வர் வலியுறுத்தல்

நடைபெற உள்ள ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை கரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்தி வைக்க வேண்டும் என ஒடிசா மாநில முதல்வர் நவீன்பட்நாயக் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

News image
ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக்
Updated On :25 ஆகஸ்ட் 2020, 11:05 am

DIN

நடைபெற உள்ள ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை கரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்தி வைக்க வேண்டும் என ஒடிசா மாநில முதல்வர் நவீன்பட்நாயக் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதியும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பால் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை  ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்தி வைக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துவருகிறது. 

இதனைத் தொடர்ந்து, கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியாலுக்கு எழுதிய கடிதத்தில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், “கரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் தேர்வுகளை நடத்துவது ஆபத்தானது. மேலும் கரோனா பரவல் நேரத்தில் இத்தகைய தேர்வுகளை நடத்துவது மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்துவிடும்.” என்று  வலியுறுத்தியுள்ளார்.

மம்தா பானர்ஜி, மனிஷ் சிசோடியா, ஆதித்யா தாக்கரே, ராகுல் காந்தி உள்ளிட்ட பிற அரசியல் தலைவர்களும் தேர்வுகளை ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

முன்னதாக ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை ஒத்திவைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.