ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,371 கரோனா தொற்று பதிவாகியுள்ளன. இதுவரை இல்லாத வகையில் ஒருநாள் பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இன்று பதிவாகியுள்ள பாதிப்பை தொடர்ந்து, அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 87,602 ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 441 ஆக உள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களில், 2,053 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்தும், 1,318 பேர் உள்ளூரில் இருந்தும் பதிவாகியுள்ளன.
அதிகபட்சமாக குர்தா மாவட்டத்தில் (547) பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளன, தொடர்ந்து கட்டாக் (357) மற்றும் கஞ்சம் (196) பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் தலா 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு புதிதாக தொற்று பதிவாகியுள்ளன.
தற்போது 27,638 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மொத்தம் 59,470 தொற்றிலிருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு... பிரதமர் மோடி முக்கிய வேண்டுகோள்!

சிஎஸ்கே பேட்டிங்: சர்ஃபராஸ் கானுக்குப் பதிலாக உர்வில் படேல்!

மே 1 முதல் சென்னையில் வெயில் சுட்டெரிக்கும்! தமிழ்நாடு வெதர்மேன்

தஞ்சை பெரிய கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


