மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கடன் தவணைக்கு தளர்வு, ஆனால் வட்டிக்கு வட்டியா? உச்ச நீதிமன்றம் கண்டனம்

கடன் தவணை (இஎம்ஐ) செலுத்த தளர்வு அறிவித்துவிட்டு, வட்டிக்கு வட்டி வசூலிப்பதா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

News image
கடன் தவணைக்கு தளர்வு, ஆனால் வட்டிக்கு வட்டியா? உச்ச நீதிமன்றம் கண்டனம்
Updated On :26 ஆகஸ்ட் 2020, 6:21 am

ANI


புது தில்லி: கடன் தவணை (இஎம்ஐ) செலுத்த தளர்வு அறிவித்துவிட்டு, வட்டிக்கு வட்டி வசூலிப்பதா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

வங்கிக் கடனை திரும்ப செலுத்துவதற்கான மாதத் தவணையின் வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை ரத்து செய்யக் கோரிய வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யாத மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், வட்டி வசூல் விவகாரத்தில் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டி மத்திய அரசு தப்பித்துக் கொள்ள முடியாது. வழக்கமாக கடன் தொடர்பான விவகாரங்களில் மத்திய அரசு, ரிசர்வ் வங்கியின் பின்னால் ஒளிந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது. வட்டிக்கு வட்டி என்பது ரிசர்வ் வங்கியின் முடிவு என்று கூறி மத்திய அரசு தப்பித்துக் கொள்கிறது.

வங்கிக் கடனை செலுத்த முடியாத பாதிப்பு, பொதுமக்களுக்கு ஏற்பட கரோனா காரணமாக மத்திய அரசு அறிவித்த பொது முடக்கம்தான் என்றும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

உங்களது பணியை சரியாக செய்யும் நேரம் இதுவல்ல, பொதுமக்களுக்கு தேவையான நிவாரணத்தை வழங்குவதுதான் முக்கியம் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.