கரோனாவால் பள்ளிகள் இயங்காததால் நடப்பாண்டில் ஒடிசாவில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 30 சதவிகிதம் பாடத்திட்டம் குறைக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்திள்ளது.
கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டன. இதனைத் தொடர்ந்து மாணவர்களின் வழக்கமான கல்வி பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து மாணவர்களின் வகுப்புகளும், தேர்வுகளும் தொடர்ந்து இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. பள்ளிகள் திறப்பது இன்னும் முடிவாகாததால் ஒடிசாவில் 2019-2020 கல்வியாண்டிற்கான பாடத்திட்டக் குறைப்பை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மாநில அரசால் அமைக்கப்பட்ட மூன்று குழுக்களின் பரிந்துரையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.
புதிய பாடத்திட்டம் இடைநிலைக் கல்வி வாரியம் (பி.எஸ்.இ), மேல்நிலைக் கல்வி கவுன்சில் (சி.எஸ்.எஸ்.இ) மற்றும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (எஸ்.சி.இ.ஆர்.டி) ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் விரைவில் வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சமீர் ரஞ்சன் டாஷ் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! நாளை வைகையில் எழுந்தளுருகிறார்!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


