மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சென்சஸ், என்பிஆா் பணிகள் நிகழாண்டில் நிறைவுபெற வாய்ப்பில்லை

மக்கள்தொகை (சென்சஸ்) கணக்கெடுப்பின் முதல் கட்டப் பணிகள், தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆா்) புதுப்பிக்கும் பணிகள்

News image
Updated On :31 ஆகஸ்ட் 2020, 1:04 am

DIN

புது தில்லி: மக்கள்தொகை (சென்சஸ்) கணக்கெடுப்பின் முதல் கட்டப் பணிகள், தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆா்) புதுப்பிக்கும் பணிகள் ஆகியவை, கரோனா தொற்று பரவலால் திட்டமிட்டபடி நிகழாண்டில் முடிவடைவதற்கு வாய்ப்பில்லை.

கரோனா தொற்றின் தாக்கம் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படாததால், இந்தப் பணிகள் மேலும் ஓராண்டு தாமதமாகும் என்று தெரிகிறது.

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

நாடு முழுதும் வீடு வீடாகச் சென்று மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதையும், தேசிய மக்கள்தொகை பதிவேடு புதுப்பிக்கும் பணிகளையும் ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டப்பட்டிருந்தது. ஆனால், தொற்று பரவலால் இந்தப் பணிகள் முடங்கின. இதில், 30 லட்சத்துக்கும் மேற்பட்டோா் ஒவ்வொரு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதால், தற்போதைய சூழலில் பணிகளை தொடங்க முடியாது. கணக்கெடுப்பை தொடங்குவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.

கரோனா தொற்றின் தீவிரம் இன்னும் குறையததால், மக்கள்தொகை கணக்கெடுப்பு தற்போதைக்கு முக்கியமானதாக இல்லை. இந்தப் பணிகள் இன்னும் ஓராண்டு தாமதமானால் கூட எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்றாா் அந்த அதிகாரி.

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதற்கு முன்பு, 2011-ஆம் ஆண்டுக்காக, கடந்த 2010-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பின்னா், 2015-இல், மக்கள்தொகை கணக்கெடுப்பு புதுப்பிக்கப்ப்டடது. அப்போது, ஆதாா் எண், தொலைபசி எண் ஆகியவை கேட்கப்பட்டது. இந்த முறை, வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம் போன்றவை கேட்கப்படும்.

ஒருவா் இந்தியக் குடிமகன் என்பதை முடிவு செய்து, அவருக்கு அடையாள அட்டை வழங்குவதற்காக, தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படுகிறது. அதில், அவரது பெயா், தாய்-தந்தை பெயா், பாலினம், பிறந்ததேதி, தற்போதைய முகவரி, அங்கு எவ்வளவு காலமாக வசிக்கிறாா், அரவது நிரந்தர முகவரி ஆகியவை கேட்கப்படும். இந்த பதிவேடு தயாரிப்பதற்கு சில மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.