தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

விமான நிலையங்களை அரசு நடத்தத் தேவையில்லை: மத்திய அமைச்சர் கருத்து

விமானம் மற்றும் விமான நிலையங்களை அரசு நடத்தத் தேவையில்லை என மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

News image
ஹர்தீப் சிங் புரி
Updated On :31 ஆகஸ்ட் 2020, 7:39 am

DIN

விமானம் மற்றும் விமான நிலையங்களை அரசு நடத்தத் தேவையில்லை என மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நமோ செயலியின் இணைய சந்திப்பில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர்,    “ஏர் இந்தியா நிறுவனம் ஒரு சொத்தாக இருந்து வருகிறது, மிகப்பெரிய சாதனை படைத்த, மிகவும் பயிற்சி பெற்ற தொழில்முறை நபர்களை ஏர் இந்தியா கொண்டுள்ளது. ஆனால் விமானங்கள் மற்றும் விமான நிலையங்களை அரசு நடத்தத் தேவையில்லை" எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர்,   “விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் பணிகள் 2020ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும்.” எனத் தெரிவித்தார்.

திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு 50 வருட காலத்திற்கு குத்தகைக்கு விட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை கேரள அரசு எதிர்க்கும் நேரத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ள இந்தக் கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.