புது தில்லி: நாட்டில் கரோனாவால் ஏற்படும் ஒருநாள் பாதிப்பு செவ்வாய்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 31,118 ஆக குறைந்துவிட்டது. நவம்பர் மாதத்திலிருந்து கரோனா பாதிப்பு 40,000- க்கு கீழ் வருவது இது 8- ஆவது முறையாகும்.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாட்டில் மொத்த கரோனா பாதிப்பு 94,62,810 ஆக அதிகரித்துவிட்டது. மேலும் 482 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 1,37,621 ஆக உயர்ந்தது.
இந்தியாவில் ஒரே நாளில் சுமார் 41,985 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து 88,89,585 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மொத்த பாதிப்பில் இது 93.81 சதவீதமாகும். இப்போதைய நிலையில் நாட்டில் 4,35,603 பேர் கரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளனர்.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 7- ஆம் தேதி நாட்டில் கரோனா பாதிப்பு 20 லட்சத்தைக் கடந்தது. ஆகஸ்ட் 23- ஆம் தேதி 30 லட்சமாகவும், செப்டம்பர் 5- ஆம் தேதி 40 லட்சமாகவும், செப்டம்பர் 16- ஆம் தேதி 50 லட்சமாகவும், செப்டம்பர் 28- ஆம் தேதி 60 லட்சமாகவும், அக்டோபர் 11- ஆம் தேதி 70 லட்சமாகவும், அக்டோபர் 29- ஆம் தேதி 80 லட்சமாகவும், நவம்பர் 20- ஆம் தேதி 90 லட்சமாகவும் கரோனா பாதிப்பு அதிகரித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வதந்திகளைப் புறக்கணிப்போம்!

ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றும் அரசு ஊழியா்களை இடமாற்றக் கோரிய மனு முடித்துவைப்பு

ஹரியாணா அரசின் வங்கிக் கணக்கில் ரூ.590 கோடி மோசடி: விரைவில் விசாரணையை தொடங்குகிறது சிபிஐ

தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சி அமைக்கும் - முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


