ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

நாட்டில் ஒருநாள் கரோனா பாதிப்பு 31,118-ஆக குறைந்தது

நாட்டில் கரோனாவால் ஏற்படும் ஒருநாள் பாதிப்பு செவ்வாய்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 31,118 ஆக குறைந்துவிட்டது. நவம்பர் மாதத்திலிருந்து கரோனா பாதிப்பு 40,000- க்கு கீழ் வருவது இது 8- ஆவது முறையாக

News image

நாட்டில் ஒருநாள் கரோனா பாதிப்பு 31,118-ஆக குறைந்தது

Updated On :1 டிசம்பர் 2020, 5:07 am

புது தில்லி: நாட்டில் கரோனாவால் ஏற்படும் ஒருநாள் பாதிப்பு செவ்வாய்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 31,118 ஆக குறைந்துவிட்டது. நவம்பர் மாதத்திலிருந்து கரோனா பாதிப்பு 40,000- க்கு கீழ் வருவது இது 8- ஆவது முறையாகும்.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: 
செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாட்டில் மொத்த கரோனா பாதிப்பு 94,62,810 ஆக அதிகரித்துவிட்டது. மேலும் 482 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 1,37,621 ஆக உயர்ந்தது. 

இந்தியாவில் ஒரே நாளில் சுமார் 41,985 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து 88,89,585 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மொத்த பாதிப்பில் இது 93.81 சதவீதமாகும். இப்போதைய நிலையில் நாட்டில் 4,35,603 பேர் கரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளனர். 

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 7- ஆம் தேதி நாட்டில் கரோனா பாதிப்பு 20 லட்சத்தைக் கடந்தது. ஆகஸ்ட் 23- ஆம் தேதி 30 லட்சமாகவும், செப்டம்பர் 5- ஆம் தேதி 40 லட்சமாகவும், செப்டம்பர் 16- ஆம் தேதி 50 லட்சமாகவும், செப்டம்பர் 28- ஆம் தேதி 60 லட்சமாகவும், அக்டோபர் 11- ஆம் தேதி 70 லட்சமாகவும், அக்டோபர் 29- ஆம் தேதி 80 லட்சமாகவும், நவம்பர் 20- ஆம் தேதி 90 லட்சமாகவும் கரோனா பாதிப்பு அதிகரித்தது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.