வேளாண் சட்டங்களைத் தடுத்து நிறுத்த பஞ்சாப் முதல்வருக்கு பல்வேறு வாய்ப்புகள் இருந்தும் அதனை அவர் செய்யவில்லை என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு கொண்டுவந்த கருப்பு சட்டங்களை தில்லியில் நான் அமல்படுத்தியதாக பஞ்சாப் முதல்வர் குற்றம் சாட்டுகிறார். விவசாயிகள் போராடி வரும் இக்கட்டான சூழலிலும் அவரால் எவ்வாறு கீழ்த்தரமான அரசியலை செய்ய முடிகிறது.
சட்டங்களை அமல்படுத்துவது மாநில உரிமைகளுக்கு அப்பாற்பட்டது. வேளாண் சட்டங்களை மாநில அரசு அமல்படுத்தியிருந்தால் நம் நாட்டின் விவசாயிகள் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது ஏன்?
விவசாயிகள் போராட்டத்திற்கு தில்லில் உள்ள 9 திடல்களை வழங்க மறுத்ததே பஞ்சாப் முதல்வரின் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு காரணம். தில்லியில் உள்ள மைதானங்களில் விவசாயிகளை அடைத்து வைத்து சிறையாக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. விவசாயிகளை சிறைவைக்க உடன்பாடில்லாததால், அதற்கு நான் அனுமதிக்கவில்லை. இதனால் ஆளும் பாஜக அரசும் ஆம் ஆத்மி மீது கோபமாகவுள்ளது என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடவிருக்கும் மான்செஸ்டர் யுனைடெட்!

பிரதமர் மோடி, ராகுலுக்கு நன்றி தெரிவித்த விஜய்!

குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 10 பேர்! முதலிடத்தில் 1 வாக்கு!

”மாற்றத்தை விரும்பிய மக்கள்! ஏமாறாமல் இருந்தால் நல்லது!” ரகுபதி பேட்டி
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


