தில்லியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 7 சதவிகிதத்துக்கும் கீழ் குறைந்துள்ளதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
தில்லியில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் தெரிவித்ததாவது:
"கடந்த 24 மணி நேரத்தில் வெறும் 4,006 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 7-ம் தேதி கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 15 சதவிகிதம். இது நேற்று 7 சதவிகிதத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. இது மிகவும் வேகமாகக் குறைகிறது. வரும் நாள்களில் 5 சதவிகிதத்துக்கும் கீழ் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலையில், தில்லி முழுவதிலும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 1,600 படுக்கை வசதிகள், கரோனாவுக்காக பிரத்யேகமாக 11,000 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.
விவசாயிகள் போராட்டத்துக்கு டிக்ரி மற்றும் சிங்கு எல்லைகளில் தில்லி அரசு மருத்துவ வசதிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது" என்றார் அவர்.
தில்லியில் சமீபத்திய நிலவரப்படி புதன்கிழமை புதிதாக 3,944 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் மீதான தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்கு ரத்து

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 4 தங்கம், 2 வெள்ளி

ஜிஜிஎஸ்ஐபி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா- தில்லி துணைநிலை ஆளுநா், முதல்வா் பங்கேற்பு - 26,649 பட்டங்கள் மாணவா்களுக்கு வழங்கல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 109 வேட்பாளா்கள் போட்டி!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


