டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தாய்மொழியில் உயர்கல்வி: குழு அமைத்தது மத்திய அரசு

பொறியியல் உள்ளிட்டப் படிப்புகளை தாய்மொழியில் படிக்கும் முறையை செயல்படுத்த உயர்கல்வித்துறை செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளாதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

News image
அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
Updated On :27 ஜனவரி 2024, 6:01 pm

DIN

பொறியியல் உள்ளிட்டப் படிப்புகளை தாய்மொழியில் படிக்கும் முறையை செயல்படுத்த உயர்கல்வித்துறை செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளாதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

அடுத்த கல்வி ஆண்டு முதல் ஐஐடி, என்ஐடி கல்வி நிலையங்களில் தாய்மொழியில் பொறியியல் பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய கல்வித் துறை தெரிவித்திருந்தது.

தாய்மொழியில் தொழில் கல்விக்கான பாடத் திட்டம் வகுக்கப்படும் என்று புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சில குறிப்பிட்ட ஐஐடி, என்ஐடி கல்வி நிலையங்களில் வரும் கல்வி ஆண்டு முதல் தாய்மொழியில் பொறியியல் பட்டப் படிப்புக்கான பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தாய்மொழியில் படிக்கும் முறையைச் செயல்படுத்த உயர்கல்வித்துறை செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் புதன்கிழமை தெரிவித்தார்.

மேலும் உயர்கல்வித் துறையின் தலைமையில் அமைக்கப்பட்டக் குழு பல்வேறு தரப்பினரின் பரிந்துரைகளை கவனத்தில் கொண்டு ஒரு மாதத்தில் அறிக்கையை சமர்ப்பிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.