காட்சிக்காக மட்டுமே பிரதமர் நரேந்திர மோடியின் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றதாக ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
கரோனா தடுப்பூசி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் கரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்துகள் கண்டறியும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவில் ஜைகோவ்-டி, கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய 3 மருந்துகள் பரிசோதனையில் உள்ளன.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுதாகாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.
இந்நிலையில் இது குறித்து ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் பேசியதாவது, ''பிகாரின் மிகப்பெரிய கட்சியாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளது. இருந்தாலும் கரோனா அச்சுறுத்தல் குறித்து விவாதிப்பதற்கான பிரதமரின் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஆர்.ஜே.டி.க்கு அழைப்பு விடுக்கவில்லை. இதன் மூலம் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் காட்சிக்காக மட்டுமே நடத்தப்பட்டது தெளிவாகிறது'' என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


