மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முழு அடைப்புக்கு யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது: விவசாயத் தலைவர்கள்

நாடு தழுவிய முழு அடைப்புக்கு யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் அவசர சேவைகளுக்கு அனுமதி உண்டு என்றும் விவசாயத் தலைவர்கள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 3:15 pm

DIN


நாடு தழுவிய முழு அடைப்புக்கு யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் அவசர சேவைகளுக்கு அனுமதி உண்டு என்றும் விவசாயத் தலைவர்கள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த விவசாயத் தலைவர் பால்பீர் சிங் தெரிவிக்கையில், "போராட்டங்களுக்கு காரணமான புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும். புதிய சட்டங்களைத் திரும்பப் பெறுவதைத் தவிர்த்து வேறு எதுவும் வேண்டாம்" என்றார்.

மற்றொரு விவசாயத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவாலா தெரிவிக்கையில், "விவசாயிகள் அமைதி காக்க வேண்டும். முழு அடைப்பைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது" என்றார்.

தர்ஷன் பால் தெரிவிக்கையில், "மீண்டும் பழைய சட்டங்களையே திரும்பக் கொண்டுவர வேண்டும். அது விவசாயிகளுக்கு விரோதமானது என்று கருதினாலும் அரசு அதையே கொண்டுவர வேண்டும்" என்றார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு மற்றும் விவசாயிகள் இடையிலான பலகட்ட பேச்சுவார்த்தைகளில் இன்னும் முடிவுகள் எட்டப்படவில்லை. போராட்டத்தின் பகுதியாக டிசம்பர் 8-இல் நாடு தழுவிய முழு அடைப்புக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.