மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குடியரசுத் தலைவர் சந்திப்புக்கு முன் எதிர்க்கட்சிகள் ஆலோசனை: சரத் பவார்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்திப்பதற்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தி கூட்டாக ஒரு நிலைபாட்டை எடுக்கவுள்ளதாக சரத் பவார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :8 டிசம்பர் 2020, 11:01 am

DIN


குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்திப்பதற்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தி கூட்டாக ஒரு நிலைபாட்டை எடுக்கவுள்ளதாக சரத் பவார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான நாடு தழுவிய பொது முடக்கத்துக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த சட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் நாளை (புதன்கிழமை) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்திக்கின்றனர்.

இதுபற்றி சரத் பவார் தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

"குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்திப்பதற்கு முன்பாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக வெவ்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி கூட்டாக ஒரு முடிவு எடுக்கவுள்ளோம். குடியரசுத் தலைவரிடம் எங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவோம்" என்றார்.

இதனிடையே சீதாராம் யெச்சூரி தெரிவிக்கையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு பட்டியலில் ராகுல் காந்தி, சரத் பவார் உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள்" என்றார் யெச்சூரி.  

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லியில் தொடர்ந்து 13 நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை நாடு தழுவிய பொது முடக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.