உலகளவில் முதலீடு செய்வதற்கு விருப்பமான நாடாக உருவாக மத்திய அரசு கவனம் செலுத்தியதற்கு சான்றாக 2020-ஆம் ஆண்டுக்கான "ஐக்கிய நாடுகள் முதலீட்டு ஊக்குவிப்பு விருது', இந்தியாவிற்கு கிடைத்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் (யுஎன்சிடிஏடி), 2020 -ஆம் ஆண்டுக்கான இந்த விருது, "முதலீட்டு இந்தியா' (இன்வெஸ்ட் இண்டியா) என்ற அரசு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை சுட்டுரையில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதில், "யுஎன்சிடிஏடியின் 2020-ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகளின் முதலீட்டு ஊக்குவிப்பு' விருதை வென்றதற்காக "இன்வெஸ்ட் இந்தியா' வுக்கு வாழ்த்துகள். இந்தியாவை உலகின் விரும்பத்தக்க முதலீட்டு இடமாக மாற்றுவதற்கும், வணிகத்தை எளிதாக்குவதற்கும் மத்திய அரசு கவனம் செலுத்துவதற்கு இது ஒரு சான்று' என்று தெரிவித்துள்ளார்.
1964-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட யுஎன்சிடிஏடி, சர்வதேச அளவில் 180 தேசிய முதலீட்டு ஊக்குவிப்பு முகவர்களை நிறுவியுள்ளது. அவர்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டு இந்த விருது வழங்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்! தமிழக காங்கிரஸ் மீது அதிருப்தி!

பிகார் சட்டப்பேரவைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

பிரசாரத்தில் சைக்கிள் ஓட்டிய விஜய்! | TVK | KKD
கும்பமேளா புகழ் மோனலிசா கணவர் மீது போக்ஸோ வழக்கு!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

