இந்தியாவில் நாள்தோறும் சராசரியாக 10 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மொத்த பரிசோதனையின் எண்ணிக்கை 15 கோடியை நெருங்குவதாக மத்திய சுகாதாரத் துறை புதன்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து அமைச்சகம் தெரிவித்ததாவது:
"கரோனா பரிசோதனை எண்ணிக்கையின் அதிகரிப்பால் இன்றைய தேதியில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 6.50 சதவிகிதமாக உள்ளது. தினசரி தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 3.14 சதவிகிதமாக உள்ளது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்தால், தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் குறையும்.
தற்போதைய நிலையில் 3,78,909 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் இது வெறும் 3.89 சதவிகிதமே. புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், புதிதாக குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை குறைகிறது.
செவ்வாய்க்கிழமை 10,22,712 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதையடுத்து, மொத்த பரிசோதனை எண்ணிக்கை 14,98,35,767 ஆக உயர்ந்துள்ளது. நாள்தோறும் மேற்கொள்ளப்படும் பரிசோதனை எண்ணிக்கை திறன்15 லட்சமாக உயர்ந்துள்ளது."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது? தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
இந்த வார ஓடிடி படங்கள்!

புதுவை, கேரளம், அஸ்ஸாம் தேர்தல்! வாக்குப்பதிவு நிலவரம்!
வீடியோக்கள்

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


