டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிடில் நிலைமை மோசமடையும்: ராகுல்

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிடில் நிலைமை மோசமடையும் என்பதை குடியரசுத் தலைவரிடம் சுட்டிக்காட்டியதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 6:04 pm

DIN

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிடில் நிலைமை மோசமடையும் என்பதை குடியரசுத் தலைவரிடம் சுட்டிக்காட்டியதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது குறித்து தில்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை எதிர்க்கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்தனர்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியுடன், சீதாராம் யெச்சூரி, சரத் பவார், டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் குடியரசுத் தலைவரை சந்தித்து வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி மனு அளித்தனர்.

பின்னர் அவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ''வேளாண் சட்டங்களையும், மின்சார திருத்தச் சட்ட மசோதாவையும் திரும்பப் பெற வேண்டும் என குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தினோம்.

உரியவர்களிடம் கலந்தாலோசிக்காமல், ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் அவை கொண்டுவரப்பட்டுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டினோம்'' என்றார்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிடில் நிலைமை மேலும் மோசமடையும் என்று குடியரசுத் தலைவரிடம் குறிப்பிட்டதாக ராகுல்காந்தி தெரிவித்தார்.

பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியதாவது, ''வேளாண் சட்டங்களை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில், யாருடைய ஆலோசனையையும் ஏற்காமல் மத்திய அரசு அவற்றை அவசர அவசரமாக சட்டமாக நிறைவேற்றியது.

தற்போது விவசாயிகள் அமைதியான முறையில் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் பிரச்னைகளை அரசு தீர்க்க வேண்டும்'' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.