பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' - ராகுல் காந்தி ட்வீட்

வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற்று பாரதியாரின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துவோம் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். 

News image
ராகுல் காந்தி
Updated On :11 டிசம்பர் 2020, 11:15 am

DIN

வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற்று பாரதியாரின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துவோம் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். 

மகாகவி பாரதியாரின் 139 ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நினைவு கூர்ந்து புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, 

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்

வீணருக்கு உழைத்துடலம் ஓயமாட்டோம்"

என்ற பாரதியின் வரிகளை மேற்கோளிட்டுக் காட்டி, 'வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற்று சிறந்த தமிழ்க் கவிஞர் பாரதியின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்வோம்' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.