கோவாவில் கரோனா வைரஸ் பரவுவதற்கு திருமண விழாக்கள் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என அரசு தலைமை மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.
கோவாவில் சமீபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சுமார் நூறு பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் ஒரு திருமண விழாவில் ஒன்றாக கலந்துகொண்டுள்ளதாகவும் கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் சிவானந்த் பண்டேகர் தெரிவித்துள்ளார்.
மேலும், கரோனா வைரஸ் தொற்று பரவும் இக்காலத்தில் மக்கள் அலட்சியமாக முகக்கவசமின்றி திருமண விழாக்களில் கலந்துகொள்கிறார்கள். புதிதாக தொற்று பாதிப்பு ஏற்படுத்துவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்று கூறிய அவர், கரோனா வைரஸ் குறித்து மக்களின் மனதில் இருந்த பயம் மெதுவாக மறைந்து வருகிறது என்றார்.
எனினும் கரோனா இரண்டாம் அலை பல்வேறு நாடுகளில் பரவி வருவதால் நம் நாட்டில் அதுபோன்ற ஒரு நிகழ்வைத் தடுக்க மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் கூறினார்.
கோவாவில் இதுவரை 49,131 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 703 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானின் போர்நிறுத்தம் இங்கு பொருந்தாது..! லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 182 பேர் பலி!

மீண்டும் ஒரு காதல் படத்தில் தனுஷ் - ஆனந்த் எல். ராய் - க்ரித்தி சனோன்?

🔴கேரளம்: இதுவரை நடந்திராத தேர்தல் சாதனை என்ன? செய்திகள் உடனுக்குடன்!
தனுஷ் நடிப்புப் பல்கலைக்கழகம்: மமிதா பைஜூ
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


