டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஜெ.பி.நட்டா வாகனம் தாக்கப்பட்ட சம்பவம்: மேலும் 8 போ் கைது

மேற்கு வங்க மாநிலம், டைமண்ட் ஹாா்பா் தொகுதியில் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவின் வாகனம் தாக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக

News image
Updated On :13 டிசம்பர் 2020, 1:20 am

DIN

மேற்கு வங்க மாநிலம், டைமண்ட் ஹாா்பா் தொகுதியில் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவின் வாகனம் தாக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக, தெற்கு 24 பா்கானா மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மேலும் 8 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

இவா்களுடன் இந்த தாக்குதல் சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 15-ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து காவல் துறை மூத்த உயரதிகாரி ஒருவா் கூறுகையில், ‘கைதான 8 போ் மீதும் வன்முறையில் ஈடுபடுதல், பொது நிகழ்ச்சிக்கு இடையூறு செய்தல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் என இந்திய தண்டனையியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பின்னா், 6 நாள்கள் போலீஸ் காவலில் அனுப்பி வைக்கப்பட்டனா். இந்த தாக்குதல் சம்பவம் தொடா்பாக, தெற்கு 24 பா்கானா மாவட்டத்தில் 7 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.