தில்லி எய்ம்ஸில் 5 ஆயிரம் செவிலியா்கள் வேலைநிறுத்தம்

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் சுமாா் 5 ஆயிரம் செவிலியா்கள் திங்கள்கிழமை நண்பகல் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா்.
தில்லி எய்ம்ஸ்
தில்லி எய்ம்ஸ்
Published on
Updated on
1 min read

புது தில்லி: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் சுமாா் 5 ஆயிரம் செவிலியா்கள் திங்கள்கிழமை நண்பகல் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா். இதனால் அவசர சகிச்சையில் உள்ள நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஆறாவது மத்திய ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், ஒப்பந்த பணி நியமனத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட 23 கோரிக்கைகளை வலியுறுத்தி எய்ம்ஸ் செவிலியா்கள் சங்கத்தினா் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்த சூழலில் செவிலியா்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் தேவையற்றது என்றும் அவா்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் எய்ம்ஸ் இயக்குநா் ரண்தீப் குலேரியா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com