மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வேளாண் சட்டங்களுக்கு நான்காவதாக ஒரு விவசாயிகள் குழு ஆதரவு

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு நான்காவதாக ஒரு குழு ஆதரவு தெரிவித்துள்ளது.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 2:21 pm

DIN


மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு நான்காவதாக ஒரு குழு ஆதரவு தெரிவித்துள்ளது.

அனைத்திந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு (ஏஐகேசிசி) தலைமையிலான விவசாயிகள் குழு மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை இன்று (திங்கள்கிழமை) சந்தித்தது. புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. கடந்த 2 வாரங்களில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் 4-வது குழு இது.

ஏஐகேசிசி பொதுச்செயலாளர் குனாவத் பாட்டில் ஹாங்கெர்கர் தலைமையிலான இந்தக் குழுவுக்கு 28 மாநிலங்களில் இருப்பு உள்ளது. தோமருடனான சந்திப்பின்போது, புதிய வேளாண் சட்டங்கள் தொடர வேண்டும் என்றும் அதில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதற்கு முன்பு ஹரியாணா மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களைச் சேர்ந்த குழுக்கள் ஆதரவு தெரிவித்தன. 

இதுபற்றி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பாட்டில் தெரிவித்தது:

"பல வருடப் போராட்டங்களுக்குப் பிறகு இந்த சட்டங்களைப் பார்க்க முடிகிறது. தில்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சில சக்திகளால் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்பது தெரியும். இதுபோன்ற சக்திகள், நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளுக்கு சுதந்திரம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள சட்டங்களைப் பறிப்பதை நாங்கள் விரும்பவில்லை.

இருதரப்புக்கிடையே போடப்பட்ட ஒப்பந்த விதிமுறைகளை மீறினால், விரைவில் தீர்வு கிடைக்க தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும்" என்றார் அவர்.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தில்லி எல்லைகளில் தொடர்ந்து 18-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.