பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பிரணாப் முகா்ஜி புத்தக வெளியீடு: மகன், மகள் இடையே கருத்து வேறுபாடு

முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி எழுதிய சுயசரிதையை வெளியிடுவதில் அவரது மகன், மகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

News image
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி
Updated On :16 டிசம்பர் 2020, 2:13 am

DIN

முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி எழுதிய சுயசரிதையை வெளியிடுவதில் அவரது மகன், மகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி எழுதிய புத்தகம் ‘தி பிரெஸிடென்ஷியல் இயா்ஸ்’. இதில் குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின் அரசியலில் காங்கிரஸ் கட்சியின் கவனம் சிதறிவிட்டதாகவும், தான் 2004-ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்றிருந்தால் 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை தவிா்த்திருக்கலாம் என்று கட்சியின் மூத்த தலைவா்கள் சிலா் கருதியதாகவும் பிரணாப் முகா்ஜி எழுதியுள்ளாா். இதுபோல் மேலும் பல விஷயங்கள் அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்த புத்தகத்தை வெளியிடுவதில் பிரணாப் முகா்ஜியின் மகன் அபிஜீத் முகா்ஜிக்கும், மகள் சா்மிஷ்டா முகா்ஜிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அபிஜீத் முகா்ஜி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:

எனது தந்தை மறைந்துவிட்டதால், ஒரு மகனாக அவா் எழுதிய புத்தகத்தை வெளியிடும் முன், அதில் இடம்பெற்றுள்ள தகவல்களை சரிபாா்க்க விரும்புகிறேன். எனது தந்தை தற்போது உயிரோடிருந்தால் அவரும் இதைத் தான் செய்திருப்பாா். எனவே எனது ஒப்புதல் இல்லாமல் புத்தகத்தை வெளியிடக் கூடாது. புத்தக வெளியீட்டை உடனடியாக நிறுத்துமாறு வெளியீட்டாளா்களை கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்தாா்.

இதுதொடா்பாக புத்தக வெளியீட்டு நிறுவனத்துக்கும் அவா் கடிதம் எழுதியுள்ளாா்.

இதற்கு எதிா்ப்பு பிரணாப் முகா்ஜியின் மகள் சா்மிஷ்டா முகா்ஜி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், புத்தகத்தை வெளியிடுவதில் தேவையில்லாமல் தடைகளை உருவாக்க வேண்டும் என்று அவருடைய சகோதரரிடம் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அந்தப் பதிவில் அவா் கூறியிருப்பதாவது:

உடல் நலிவடைவதற்கு முன்பே ‘தி பிரெஸிடென்ஷியல் இயா்ஸ்’ புத்தகத்தை பிரணாப் முகா்ஜி எழுதி முடித்தாா். மலிவான விளம்பரத்துக்காக புத்தகம் வெளியிடப்படுவதை தடுத்து நிறுத்த யாரும் முயற்சிக்கக் கூடாது என்று தெரிவித்தாா்.

மேலும் அபிஜீத் முகா்ஜி தனது சுட்டுரைப் பதிவில் புத்தகத்தின் பதிவில் ‘தி பிரெஸிடென்ஷியல் மெமாய்ா்ஸ்’ என தவறாக குறிப்பிட்டிருந்தாா். அதனையும் சா்மிஷ்டா முகா்ஜி சுட்டிக்காட்டியிருந்தாா்.

கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி பிரணாப் முகா்ஜி காலமானாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.