திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களை அழைத்து, தங்களது கட்சியில் சேர்க்க பாஜக முயன்று வருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கோச்பெஹாரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மிக அரிய வாய்ப்பு என்றுக் கூறி திரிணமூல் காங்கிரஸ் கட்சியை, பணப்பைகளைக் கொண்டு பாஜக உடைக்கப் பார்க்கிறது.
பாஜக தலைவர்களின் செயலைப் பாருங்கள், அவர்கள் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் சுப்ரதா பக்சியை அழைத்து, பாஜகவில் சேருமாறு கேட்டுள்ளனர். பாஜகவினருக்கு எந்த அரசியல் கொள்கையும், சித்தாந்தமும் இல்லை. ஒன்று அல்லது இரண்டு சந்தர்ப்பவாதிகள் மட்டுமே தங்களது சுயநலத்துக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எங்கள் கட்சித் தலைவர்களை, தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயல்கிறது. எதிர்க்கட்சிகளை உடைக்க பணப்பலத்தை பாஜக நம்புகிறது. ஆனால் நாங்கள் அவர்களை சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்கொண்டு வெற்றி பெறுவோம் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வந்தே பாரத் ரயில் தடம் புரண்டது!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் த.வெ.க. தலைவர் விஜய் தரிசனம்!

இந்தியாவின் கண்ணியத்தில் சமரசம் கூடாது!

கை கழுவலாகாது!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


