அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திரிணமூல் தலைவர்களை தங்கள் கட்சியில் இணைக்க முயற்சிக்கிறது பாஜக: மம்தா 

திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களை அழைத்து, தங்களது கட்சியில் சேர்க்க பாஜக முயன்று வருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

News image
திரிணமூல் தலைவர்களை தங்கள் கட்சியில் இணைக்க முயற்சிக்கிறது பாஜக: மம்தா 
Updated On :16 டிசம்பர் 2020, 10:15 am

PTI


திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களை அழைத்து, தங்களது கட்சியில் சேர்க்க பாஜக முயன்று வருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கோச்பெஹாரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மிக அரிய வாய்ப்பு என்றுக் கூறி திரிணமூல் காங்கிரஸ் கட்சியை, பணப்பைகளைக் கொண்டு பாஜக உடைக்கப் பார்க்கிறது.

பாஜக தலைவர்களின் செயலைப் பாருங்கள், அவர்கள் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் சுப்ரதா பக்சியை அழைத்து, பாஜகவில் சேருமாறு கேட்டுள்ளனர். பாஜகவினருக்கு எந்த அரசியல் கொள்கையும், சித்தாந்தமும் இல்லை. ஒன்று அல்லது இரண்டு சந்தர்ப்பவாதிகள் மட்டுமே தங்களது சுயநலத்துக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எங்கள் கட்சித் தலைவர்களை, தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயல்கிறது. எதிர்க்கட்சிகளை உடைக்க பணப்பலத்தை பாஜக நம்புகிறது. ஆனால் நாங்கள் அவர்களை சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்கொண்டு வெற்றி பெறுவோம் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.