மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சருடன் பிரதமர் மோடி சந்திப்பு

இந்தியா வந்திருக்கும் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ராப். பிரதமர் நரேந்திர மோடியை இன்று புது தில்லியில் சந்தித்துப் பேசினார்.

News image

பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சருடன் பிரதமர் மோடி சந்திப்பு

Updated On :16 டிசம்பர் 2020, 9:35 am

இந்தியா வந்திருக்கும் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ராப். பிரதமர் நரேந்திர மோடியை இன்று புது தில்லியில் சந்தித்துப் பேசினார்.

பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ராப், பிரதமர் நரேந்திர மோடியை புது தில்லியில் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகள் இடையே, பல்வேறு கூட்டு உத்திகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

இந்தியா - பிரிட்டன் இடையே கரோனா பேரிடருக்கு பிந்தைய காலக்கட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்தும் இரு தலைவர்களும் கலந்தாலோசனை நடத்தியுள்ளனர். 

வரும் ஜனவரி மாதம் புது தில்லியில் நடைபெறும் குடியரசுத் தின விழாவில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவிருக்கும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

தில்லியில் ஜன. 26-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்திய குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராகப் பங்கேற்கும்படி பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டு பிரதமராக பதவியேற்ற பிறகு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய பிறகு ஜான்சன் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.