சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

‘எல்லைப் பிரச்னையை விவாதிக்கும் உரிமையை உறுதிபடுத்துங்கள்’: ராகுல்காந்தி

நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் சுதந்திரமாகப் பேச அனுமதிக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி மக்களவை சபைத் தலைவர் ஓம் பிர்லாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

News image
‘எல்லைப் பிரச்னையை விவாதிக்கும் உரிமையை உறுதிபடுத்துங்கள்’: ராகுல்காந்தி
Updated On :17 டிசம்பர் 2020, 2:31 pm

DIN

நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் சுதந்திரமாகப் பேச அனுமதிக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி மக்களவை சபைத் தலைவர் ஓம் பிர்லாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

புதன்கிழமை நாட்டின் ராணுவப் பாதுகாப்புக்கான நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அண்டை நாடுகளின் எல்லை அத்துமீறல்கள் குறித்து பேச அனுமதிக்கப்படவில்லை எனக் கூறி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி பாதியில் வெளியேறினார்.

இந்நிலையில் வியாழக்கிழமை மக்களவை சபைத் தலைவர் ஓம் பிர்லாவிற்கு அவர் கடிதம் எழுதினார். அதில் நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்கு பதிலாக ஆயுதப்படைகளின் சீருடை பற்றி விவாதிப்பதிலேயே நேரம் வீணடிக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை பாராளுமன்ற குழு கூட்டங்களில் வெளிப்படுத்தும் உரிமை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறு அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார். 

சீன ஆக்கிரமிப்பு மற்றும் லடாக் பிரச்னைகளை எழுப்ப முயன்றபோது பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஜூவல் ஓரம்  ராகுல்காந்தியை பேச அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.