புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

எரிவாயு உள்கட்டமைப்பில் ரூ.4.50 லட்சம் கோடி முதலீட்டுத் திட்டம்: பிரதான்

நாட்டில் வரும் 2024-ஆம் ஆண்டு வரையில் எரிவாயு கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக 6,000 கோடி டாலரை (ரூ.4.50 லட்சம் கோடி) முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 7:46 pm

DIN

புது தில்லி: நாட்டில் வரும் 2024-ஆம் ஆண்டு வரையில் எரிவாயு கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக 6,000 கோடி டாலரை (ரூ.4.50 லட்சம் கோடி) முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

அசோசெம் நிறுவன தின வார விழாவில் கலந்து கொண்ட அவா் இதுகுறித்து மேலும் கூறியுள்ளதாவது:

இந்தியாவின் மொத்த எரிசக்தி பயன்பாட்டில் எரிவாயுவின் பங்களிப்பு தற்போதைய நிலையில் வெறும் 6.2 சதவீதமாகவே உள்ளது. அரசு எடுத்து வரும் சீரிய முயற்சிகளால் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்த பங்களிப்பு 15 சதவீதமாக அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

உள்நாட்டில் எரிவாயு கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக 2024-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் 6,000 கோடி டாலரை (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.4.50 லட்சம் கோடி) முதலீடு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

நகா்புற எரிவாயு விநியோகம் (சிஜிடி), திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி) முனையங்கள், பைப்லைன்கள் உள்ளிட்டவற்றை அமைப்பதில் இந்த தொகை முதலீடு செய்யப்படவுள்ளது.

சிஜிடி திட்டங்கள் 400 மாவட்டங்களில் உள்ள 232 பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் 53 சதவீதத்தையும், 70 சதவீத மக்களையும் இந்த திட்டம் சென்றடைய ஏதுவாக அமையும்.

போக்குவரத்தில் எல்என்ஜி பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் தூய்மையான இயக்கத் தீா்வுகளை பின்பற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இதற்காக, நாடு முழுவதும் 1,000 எல்என்ஜி எரிபொருள் நிரப்பும் நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கு முன்னோட்டமாகவே கடந்த மாதம் 50 எல்என்ஜி எரிபொருள் நிலையங்களை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.