

கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராக்பூர் எம்எல்ஏ ஷில்பத்ரா தத்தா, கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் கடந்த 24 மணி நேரத்தில், திரிணமூல் கட்சியிலிருந்து விலகும் மூன்றாவது நபராவார்.
ஏற்கனவே, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ பதவியை சுவேந்து அதிகாரி புதன்கிழமை ராஜிநாமா செய்த நிலையில், இன்று மற்றொரு எம்எல்ஏவும் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
இதையும் படிக்கலாமே.. ரயில் பயணிகளுக்கு புதிய வசதி: பக்கவாட்டு கீழ் படுக்கையில் மாற்றம் (விடியோ)
அந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், தொடர்ந்து எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்வது கட்சிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. அவா்கள் பாஜகவில் இணையக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்த தத்தா, தனது ராஜிநாமா கடிதத்தை கட்சித் தலைவர் மம்தா பானர்ஜிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவிட்டதாகக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.