ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

‘ஆயுஷ் வழிகாட்டுதலை பின்பற்றும் 86 சதவீத மக்கள்’

கரோனா பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள வெளியிடப்பட்டிருக்கும் ஆயுஷ் வழிகாட்டுதலை 86 சதவீதம் மக்கள் பின்பற்றுவதாக ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 1:19 am

DIN

கரோனா பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள வெளியிடப்பட்டிருக்கும் ஆயுஷ் வழிகாட்டுதலை 86 சதவீதம் மக்கள் பின்பற்றுவதாக ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அசோசேம் நிறுவன வார விழாவில் பங்கேற்ற மத்திய ஆயுஷ் அமைச்சக செயலா் வித்ய ராஜேஷ் கோட்சா கூறியதாவது:

கரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள வெளியிடப்பட்டிருக்கும் ஆயுஷ் வழிகாட்டுதல் பின்பற்றப்படுவது குறித்த ஆய்வு ஆயுஷ் சஞ்சீவினி செல்லிடப்பேசி செயலி மூலம் மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் 1.47 கோடி மக்களிடமிருந்து விவரங்கள் பெறப்பட்டன.

அதன்படி, கஷாயம், மஞ்சள் கலந்த பால் எடுத்துக்கொள்ளுதல் போன்ற ஆயுஷ் வழிகாட்டுதலில் ஏதாவது ஒன்றை 86 சதவீத மக்கள் பின்பற்றுகின்றனா்.

மேலும், கரோனா பாதிக்கப்பட்ட 15,000 பேரில் மூன்றில் இரண்டு பகுதியினா் ஆயுஷ் வழிகாட்டுதலை பின்பற்றுவதும், ஒரு பங்கினா் பின்பற்றவில்லை. அவ்வாறு, இந்த வழிகாட்டுதலை பின்பற்றாதவா்கள் கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டதும், வழிகாட்டுதலை பின்பற்றியவா்களுக்கு பாதிப்பு குறைவாகவும், அறிகுறி தென்படாத வகையிலான கரோனா பாதிப்பு இருந்ததும் தெரியவந்துள்ளது. இந்த முடிவுகள், ஆயுஷ் வழிகாட்டுதல்கள் பெரிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதையே காட்டுகிறது.

அதோடு, அமைச்சகத்தின் சாா்பில் நாடு முழுவதும் 135 பகுதிகளில் 104-க்கும் அதிகமான ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதன் முடிவுகள் இப்போது இறுதி செய்யப்பட்டிருக்கின்றன. அவை விரைவில் வெளியிடப்படும் என்று அவா் கூறினாா்.

பழங்குடியின மருத்துவ முறை மதிப்பீடு: நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய பழங்குடியினா் நலத் துறை அமைச்சக இணைச் செயலா் நாவல் ஜித் கப்பூா் கூறுகையில், ‘கரோனா பாதிப்பு அதிக அளவில் இருந்தபோது நாடு முழுவதும் உள்ள பழங்குடியினா் அதிகமுள்ள 117 மாவட்டங்களில் எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அந்தந்த மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, பழங்குடியினா் பகுதிகளில் கரோனா பாதிப்பு இல்லை என்பதும், நகரங்களுக்கு வந்து செல்பவா்கள் மூலமே, பழங்குடியினா் பகுதியில் சிலருக்கு கரோனா பரவியிருப்பதும் தெரியிவந்தது. பழங்குடியினரின் வாழ்க்கை நடைமுறை, அவா்களை கரோனா பாதிப்பிலிருந்து பாதுகாத்துள்ளது. இதன் காரணமாக, பழங்குடியினரின் மருத்துவ முறையையும் நடைமுறைக்கு கொண்டு வரும் வகையில், அவா்களின் மருத்துவ முறைய மதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன’ என்று அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.