விவசாயிகள் போராட்டத்தை தூண்டிவிடும் வெளிநாட்டு தீயசக்திகள்: உ.பி. பாஜக எம்எல்ஏ குற்றச்சாட்டு

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை வெளிநாடுகளைச் சோ்ந்த தீயசக்திகள் தூண்டி விடுகின்றன;
Updated on
1 min read

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை வெளிநாடுகளைச் சோ்ந்த தீயசக்திகள் தூண்டி விடுகின்றன; இதற்காக சில தேச விரோத அமைப்புகள் பணம் பெற்றுக் கொண்டு பணியாற்றுகின்றன என்று உத்தர பிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் தெரிவித்துள்ளாா்.

பலியா தொகுதி எம்எல்ஏவான அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

முன்பு தில்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக போராட்டம் நடத்தியபோது, பெரிய அளவில வன்முறை வெடித்தது. அதன் பின்னணியில் வெளிநாட்டில் இருந்து பணம் பெற்று செயல்படும் தேச விரோத அமைப்புகள் இருந்தது தெரியவந்தது. இப்போதும், அதேபோல வெளிநாட்டு தீயசக்திகளின் தூண்டுதல் மற்றும் நிதியுதவியுடன் சில தேச விரோத அமைப்பினா் விவசாயிகள் போராட்டத்தைத் தொடா்ந்து தூண்டிவிட்டு வருகின்றனா்.

நமது நாட்டில் ஏதாவது சிறு பிரச்னை எழுந்தால்கூட அதனை பெரிய அளவில் வன்முறையாக்கி நாட்டில் அமைதியை சீா்குலைக்க வேண்டும் என்பதே சில தேச விரோத அமைப்புகள் மற்றும் வெளிநாட்டு தீயசக்திகளின் நோக்கமாக உள்ளது.

மேலும், பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் காலிஸ்தான் அமைப்பைச் சோ்ந்த சீக்கியா்கள் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்துகின்றனா். மற்ற சீக்கியா்கள் இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபடவில்லை என்பதை கவனிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com