வரும் 5 ஆண்டுகளை பாஜகவுக்குக் கொடுங்கள்: அமித் ஷா பேச்சு

அடுத்த ஐந்து ஆண்டுகளை பாஜகவுக்குக் கொடுங்கள், மேற்கு வங்கத்தை தங்க மாளிகையாக மாற்றிக் காட்டுகிறோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
வரும் 5 ஆண்டுகளை பாஜகவுக்குகொடுங்கள்: அமித் ஷா பேச்சு
வரும் 5 ஆண்டுகளை பாஜகவுக்குகொடுங்கள்: அமித் ஷா பேச்சு


மிட்னாபூர்: அடுத்த ஐந்து ஆண்டுகளை பாஜகவுக்குக் கொடுங்கள், மேற்கு வங்கத்தை தங்க மாளிகையாக மாற்றிக் காட்டுகிறோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக மேற்கு வங்க மாநிலத்துக்குச் சென்றிருக்கும் அமித் ஷா, மிட்னாபூரில் இன்று நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, அவர் கூறுகையில், மேற்கு வங்க மாநிலத்தை ஆள, காங்கிரஸ் கட்சிக்கு 30 ஆண்டுகாலத்தை கொடுத்தீர்கள், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 27 ஆண்டுகளை அளித்தீர்கள், தற்போது மம்தாவுக்கு 10 ஆண்டுகளைக் கொடுத்திருக்கிறீர்கள், பாஜகவுக்கு வரும் 5 ஆண்டுகளைக் கொடுங்கள், நாங்கள் மேற்கு வங்கத்தை தங்க மாளிகையாக மாற்றிக் காட்டுகிறோம் என்று உறுதிமொழி அளித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள்கள் பயணமாக மேற்குவங்கத்திற்கு சென்றுள்ளார். கொல்கத்தா சென்ற அவர், ராமகிருஷ்ண ஆசிரமத்தில் வழிபாடு நடத்தினார். அதனைத்தொடர்ந்து சுவாமி விவேகானந்தர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

பின்னர் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அமித் ஷா, ''இது விவேகானந்தர் பிறந்த இடம். ஆன்மிகத்தையும், நவீனத்துவத்தையும் இணைத்தவர் சுவாமி விவேகானந்தர். அவர் நமக்கு காட்டிய உன்னதமான வழியில் நடப்போம்'' என்று கூறியிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com