சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களிலும் காங்கிரஸ் மூத்த தலைவா்களைச் சந்திக்க சோனியா காந்தி திட்டமிட்டுள்ளாா். நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரை மத்திய அரசு ரத்து செய்தது, தமிழகம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலுக்கான கூட்டணியை இறுதி செய்வது, பிகாா் பேரவைத் தோ்தல், கேரள உள்ளாட்சித் தோ்தலில் காங்கிரஸுக்கு பின்னடைவு ஏற்பட்டதற்கான காரணங்கள், வேளாண் சட்டங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கட்சித் தலைவா்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தவுள்ளாா்.