

தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 627 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவிலும் கரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தெலங்கானாவில் இன்றைய நிலவரப்படி 627 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 2,80,822 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், நோய் தொற்றுக்கு புதிதாக நால்வர் பலியாகியுள்ளதால், மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,510 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா பாதித்து 6,942 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், மொத்தம் 2,72,370 இதுவரை குணமடைந்தனர்.
நாட்டில் இதுவரை குணமடைந்தோர் விகிதம் 96.99 ஆகவும், இறப்பு விகிதம் 0.53 ஆகவும் அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.