சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ராஜஸ்தானில் கடந்த 2 நாள்களாக குளிர்ந்த வெப்பநிலை

ராஜஸ்தானில் கடந்த 2 நாள்களாக வெப்பநிலை மிகவும் குறைந்து மலைப்பிரதேசங்களில் ஏற்படும் குளிர்ந்த வெப்பநிலை நிலவி வருகிறது.

News image
ராஜஸ்தானில் கடந்த 2 நாள்களாக குறைந்த வெப்பநிலை
Updated On :20 டிசம்பர் 2020, 6:40 am

DIN

ராஜஸ்தானில் கடந்த 2 நாள்களாக வெப்பநிலை மிகவும் குறைந்து மலைப்பிரதேசங்களில் ஏற்படும் குளிர்ந்த வெப்பநிலை நிலவி வருகிறது.

மேற்கு ராஜஸ்தானின் மவுண்ட் அபு என்ற பகுதியில் மைனஸ் ஒரு டிகிரி செல்சியஸுக்கும் கீழ் வெப்பநிலை குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நாட்டிலேயே அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் மாநிலமாக ராஜஸ்தான் உள்ளது. கடந்த ஆண்டு கோடை காலத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் 50.8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியது.

இதனிடையே தற்போது குளிர்காலத்தையொட்டி ராஜஸ்தான் பகுதியில் வெப்பநிலை குறைந்து குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது.

மவுண்ட் அபு பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக மைனஸ் ஒரு டிகிரி செல்சியஸிற்கும் கீழ் வெப்பநிலை குறைந்துள்ளது.

இது குறித்து பேசிய சுற்றுலா பயணி ஒருவர், ராஜஸ்தானில் முதல்முறையாக பனி படர்ந்துள்ளதைக் காண்கிறோம். மணாலியில் இருப்பதைப் போன்று பனி படர்ந்துள்ளது. இது அற்புதமான உணர்வு என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.