

தில்லியில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 803 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,17,808 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,669 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 27 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 5,98,249 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 10,304 ஆக உயர்ந்துள்ளது.
9,255 பேர் இன்னும் கரோனாவுக்கான சிகிச்சையில் உள்ளனர்.
தில்லியில் இன்று 62,440 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 10 நாள்கள் தரவுகளின்படி இறப்பு விகிதம் 2.59 சதவிகிதமாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.