மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்தியா - பிரிட்டன் இடையே டிச.31 வரை விமான போக்குவரத்துக்குத் தடை

இந்தியா - பிரிட்டன் இடையே டிசம்பர் 31-ம் தேதி வரை விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

News image
இந்தியா - பிரிட்டன் இடையே டிச.31 வரை விமான போக்குவரத்துக்கு தடை
Updated On :21 டிசம்பர் 2020, 9:52 am

DIN


புது தில்லி: இந்தியா - பிரிட்டன் இடையே டிசம்பர் 31-ம் தேதி வரை விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்த தடை உத்தரவு டிசம்பர் 22-ம் தேதி நள்ளிரவு 11.59 மணி முதல் அமலுக்கு வருகிறது. டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளும் பிரிட்டனிலிருந்து விமானச் சேவைக்குத் தடை விதித்திருக்கும் நிலையில், இந்தியா - பிரிட்டன் இடையே நாளை முதல் தற்காலிகமாக விமானப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்படுவதாக விமானப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

பிரிட்டனில் தன்னைத்தானே தகவமைத்துக் கொண்ட புதிய அதி தீவிர கரோனா வைரஸ் கண்டறியப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொளள்ப்பட்டுள்ளது.

பிரிட்டனில் உருமாறிய அதி தீவிர கரோனா தொற்று 70 சதவீதம் அதி வேகமாகப் பரவி வருவதால், லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பிரிட்டனிலிருந்து விமானப் போக்குவரத்துக்கு கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி, சௌதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் தடை விதித்திருக்கும் நிலையில், இந்தியாவும் தடை விதித்துள்ளது.

பிரிட்டனில் கரோனா தீவிரம் அதிகரித்திருக்கும் நிலையில், விமானப் போக்குவரத்து மூலம் தில்லியிலும் தாக்கம் அதிகரிக்கும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் விடுத்த வேண்டுகோளை அடுத்து, விமானப் போக்குவரத்து அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.