விவசாயிகளின் நலன்களை புறக்கணிக்கிறது மத்திய அரசு: சஞ்சய் ரெளத் குற்றச்சாட்டு

நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் நலன்களை மத்திய அரசு புறக்கணித்து வருவதாக சிவசேனை கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினமான சஞ்சய் ரெளத் 
விவசாயிகளின் நலன்களை புறக்கணிக்கிறது மத்திய அரசு: சஞ்சய் ரெளத் குற்றச்சாட்டு
Updated on
1 min read

மும்பை: நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் நலன்களை மத்திய அரசு புறக்கணித்து வருவதாக சிவசேனை கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினமான சஞ்சய் ரெளத் குற்றஞ்சாட்டினார்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி தில்லியின் எல்லைப் பகுதிகளில் கடந்த நவம்பர் 26-ஆம் தேதிமுதல் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேசிய விவசாயிகள் தினத்தையொட்டி மும்பையில் செய்தியாளர்களிடம் சஞ்சய் ரெளத் புதன்கிழமை கூறியதாவது: 
விவசாயிகள் இந்நாட்டின் முதுகெலும்பாக விளங்குகிறார்கள். 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து அவர்கள் தில்லியின் எல்லைப் பகுதிகளில் மட்டுமன்றி பிற இடங்களிலும்  போராட்டத்தில் ஈடுபட்
டுள்ளனர்.
ஆனால், சில தொழிலதிபர்கள் பயனடைவதற்காக விவசாயிகளை பலவீனப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
விவசாயிகளிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். 
போராட்டம் நடத்திவரும் நிலையில் தேசிய விவசாயிகள் தினம் ஒரு கருப்பு நாள் ஆகும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com