மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கர்நாடகத்தில் இன்று முதல் இரவில் ஊரடங்கு

கர்நாடகத்தில் வியாழக்கிழமை முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 10:57 pm

DIN


பெங்களூரு: கர்நாடகத்தில் வியாழக்கிழமை முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் புதிய வகை கரோனா தொற்றுப் பரவி வருவதோடு அந்த நாட்டிலிருந்து இந்தியா வந்த ஒரு சிலருக்கு கரோனா தொற்று இருப்பதாகக் கூறப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் வியாழக்கிழமை முதல் ஜன. 2-ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பகலில் வழக்கம்போல செயல்படலாம்.
மாநிலத்தில் கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்துவரும் நிலையில் புதிய வகை கரோனா தொற்று பரவாமல் தடுக்க மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவின்போது வாடகை கார், ஆட்டோ உள்பட தனியார் வாகனங்கள் இரவில் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் இரவு 9.30 வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்கள், மாவட்டங்களுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகளும் இரவில் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து முதல்வர் எடியூரப்பா புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், வியாழக்கிழமை முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் இரவு 11 மணி முதல்  காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு உத்தரவு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும். வெளிநாடுகளிலிருந்து வருபவர் கரோனா தொற்று இல்லை என்ற மருத்துவச் சான்றிதழைக் காண்பிப்பது அவசியம். அந்தப் பரிசோதனையும் 72 மணி நேரத்துக்குள் செய்திருக்க வேண்டும். பெங்களூரு உள்பட அனைத்து விமான நிலையங்களிலும் சுகாதாரத் துறை ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளை முழுமையாக சோதனை செய்தபிறகு வெளியில் செல்ல அனுமதிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். இதை சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகரும் வலியுறுத்தி உள்ளார்.
கலால் துறை அமைச்சர் எச்.நாகேஷ் கூறுகையில், ஊரடங்கினால் மது விற்பனைக்குப் பாதிப்பு ஏற்பட்டாலும், மக்கள் நலன் கருதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். ஊரடங்கின்போது அரசு உத்தரவுக்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெங்களூரு மாநகரக் காவல் ஆணையர் கமல் பந்த் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.