அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஆந்திரத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்தது: 36 பேர் காயம்

ஆந்திருத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் காயமடைந்தனர். 

News image
Updated On :24 டிசம்பர் 2020, 12:34 pm

DIN

ஆந்திருத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் காயமடைந்தனர். 

இதுகுறித்து ஜக்கையாபேட் உதவி ஆய்வாளர் கேவி ராமாராவ் தெரிவிக்கையில், விசாகப்பட்டினத்திலிருந்து 2 ஓட்டுநர்கள் உள்பட 43 பேருடன் தனியார் பேருந்து ஒன்று ஐதராபாத்தை நோக்கி இன்று புறப்பட்டது. 

அதிகாலை 4.30 மணியளவில் ஹனுமஞ்சி பள்ளி கிராமம் அருகே பேருந்து சென்றுகொண்டிருந்தபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட 36 பேர் காயமடைந்தனர். 

உடனடியாக அவர்கள் அனைவரும் ஜக்கையாபேட் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் எலும்பு முறிவு ஏற்பட்ட 4 பேர் மேல் சிகிச்சைக்காக விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்றார். 

மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.