இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மகாராஷ்டிரம்: தலைமை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

மகாராஷ்டிரத்தில் தலைமை காவலர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். 

News image
Updated On :24 டிசம்பர் 2020, 11:20 am

DIN

மகாராஷ்டிரத்தில் தலைமை காவலர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். 
மகாராஷ்டிர மாநிலம், நல்லசோப்ரா பகுதியில் துலின்ஜ் காவல் நிலையம் உள்ளது. இக்காவல் நிலையித்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் சஹாராம் போயே(41). 
நேற்று இரவு பணியில் இருந்த இவர் இன்று காலை காவல்நிலையத்தில் உள்ள கழிப்பறையில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு சக காவலர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். 
ஆனால் சஹாராம் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துவிட்டனர். 
காவலர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் தெரிவரவில்லை. எனினும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிரத்தில் தலைமை காவலர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.