

பல்வேறு முயற்சிகள் மூலம் இந்தியாவை வளப்படுத்தியவர் வாஜபேயி என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பஹாரி வாஜபேயின் 96வது பிறந்தநாள் இன்று (டிச.25) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்தவகையில் தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் சுட்டுரையில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்தியாவை தனது வளர்ச்சி பணிகள் மூலம் முன் எப்போதுமில்லாத உயரத்துற்கு கொண்டு சென்றவர். வலிமையான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்குவதில் அவர் மேற்கொண்ட கடுமையான முயற்சிகள் என்றும் நினைவுகூரத்தக்கது என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.