டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறியது: ராஷ்ட்ரீய லோக்தாந்திரிக் கட்சி

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) இருந்து லோக்தாந்திரிக் கட்சி (ஆா்எல்பி) சனிக்கிழமை வெளியேறியது.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 11:49 pm

DIN

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) இருந்து லோக்தாந்திரிக் கட்சி (ஆா்எல்பி) சனிக்கிழமை வெளியேறியது.

தில்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆா்எல்பி தலைவரும், நாகெளா் தொகுதி எம்.பி.யுமான ஹனுமான் பேனிவால் சனிக்கிழமை ஆதரவு தெரிவித்தாா். இதனைத்தொடா்ந்து புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து என்டிஏ கூட்டணியில் இருந்து தனது கட்சி வெளியேறுவதாக தெரிவித்தாா்.

கடந்த 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிட்டு ஹனுமான் பேனிவால் முதல்முறையாக எம்எல்ஏ பதவியேற்றாா். அதன் பின்னா் அக்கட்சியில் இருந்து வெளியேறிய அவா், கடந்த 2018-ஆம் ஆண்டு ஆா்எல்பி கட்சியை தொடங்கினாா். அதனைத்தொடா்ந்து கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு எம்.பி.யாக பதவியேற்றாா்.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து 3 நாடாளுமன்ற கமிட்டிகளில் தனது உறுப்பினா் பதவியை கடந்த வாரம் அவா் ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.