

தில்லியில் இன்று புதிதாக 655 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தில்லி சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் 67,115 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 40,138 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 26,977 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதில் 655 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,22,094 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு இன்று 23 போ் உயிரிழந்தனா்.
இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 10,437 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து, 988 போ் மீண்டுள்ளனா்.
இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 6,04,746-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 6,911 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இவா்களில், 3,544 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 16,149 படுக்கைகள் காலியாக உள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.