ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தாணே குடிசைப் பகுதியில் தீ விபத்து: 8 குடிசைகள் சேதம்

மகாராஷ்டிரத்தில் தாணே குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 குடிசைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. மக்கள் உடனடியாக வெளியேறியதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன.

News image
தாணே குடிசைப் பகுதியில் தீ விபத்து: 8 குடிசைகள் சேதம் (கோப்புப்படம்)
Updated On :26 டிசம்பர் 2020, 7:19 am

DIN

மகாராஷ்டிரத்தில் குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 குடிசைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. மக்கள் உடனடியாக வெளியேறியதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன.

மகாராஷ்டிர மாநிலத்தில் தாணேயிலுள்ள பிவாண்டி குடிசைப் பகுதியில் இன்று (டிச.26) அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

மக்கள் உடனடியாக குடிசைகளிலிருந்து வெளியேறி, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். 

உடனடியாக 2 தீயணைப்பு வாகனங்களுடன் நிகழ்விடத்திற்கு வந்த வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

குடிசைகள் அருகருகே இருந்ததால், தீ வேகமாக பரவியதாகவும், இதில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றும் பிவாண்டி மாநகராட்சி தீயணைப்புத்துறை தலைமை அதிகாரி ராஜேஷ் பவார் தெரிவித்தார்.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.